மின்தடை இருளில் மூழ்கிய அறை..
ஏதோ ஓர் வழி
அறைக்குள் வீழ்ந்து மறைந்தது மின்னலின் ஒளி...
கணநேர ஒளி புகைப்படம் எடுத்தது எனது அறையை...
அறை கொண்ட பொருட்கள் தோன்றி மறைந்தன....
மழை கொண்ட மேகங்கள் மனதை தூண்டித் தொலைத்தன...
புவிகொண்ட வான்குடைக்குள் மழை தொடங்க
என்னைத் தீண்டவே நீளுதோ வானத்தின் விரல்கள்...
என்னைத் தீண்டவே நீளுதோ வானத்தின் விரல்கள்...
மின்தடை நீங்கியும்
நான் கொண்ட மழைத் தடை நீங்கவில்லை.
மறுநாள் தேர்வு ....
நான் கொண்ட மழைத் தடை நீங்கவில்லை.
மறுநாள் தேர்வு ....
காய்ச்சல் பயம் எனக்கில்லை...
தீண்டல் தாங்கா தொட்டால்சிணுங்கியும் நானில்லை...
மழையில் ஊறும் காகித குணமும் எனக்கில்லை...
நீரில் உருகும் பனித்தேகமாய் நான் பிறக்கவுமில்லை...
மழைக்காதலை நானென்றும் சபித்ததில்லை..
முற்றும் தூய மழைநீர் அமிலம் கொள்ளுமா சிலநேரம்.? என வேதியியல் ரீதியில் சந்தேகித்ததுமில்லை...
தீண்டல் தாங்கா தொட்டால்சிணுங்கியும் நானில்லை...
மழையில் ஊறும் காகித குணமும் எனக்கில்லை...
நீரில் உருகும் பனித்தேகமாய் நான் பிறக்கவுமில்லை...
மழைக்காதலை நானென்றும் சபித்ததில்லை..
முற்றும் தூய மழைநீர் அமிலம் கொள்ளுமா சிலநேரம்.? என வேதியியல் ரீதியில் சந்தேகித்ததுமில்லை...
இருந்தும்..என் அம்மா விதித்த தேர்வு நேர மழைத்தடைக்கு விலக்குதான் இல்லை..
இத்துடன் சேர்ந்து தொலைந்த படிப்பு நேர அவகாசம் நாளைய தினம் கருணை காட்டப் போவதுமில்லை ...
இத்துடன் சேர்ந்து தொலைந்த படிப்பு நேர அவகாசம் நாளைய தினம் கருணை காட்டப் போவதுமில்லை ...
தேகம் தயங்கினாலும்...மனம் துணிந்தது..
குழப்பச் சூழல் சூழ்ந்தது என்னை...
படிக்க அழைக்கிறது
மழைக்காட்சி நன்கு தெரியும் என் வாசல் திண்ணை...
குழப்பச் சூழல் சூழ்ந்தது என்னை...
படிக்க அழைக்கிறது
மழைக்காட்சி நன்கு தெரியும் என் வாசல் திண்ணை...
காட்சியை மட்டுமாவது ரசிப்போம் என
திண்ணைப் படிப்பு துவங்கியது...
திண்ணைப் படிப்பு துவங்கியது...
படித்து முடித்த பகுதிகளில்
புத்தகம் கொண்ட தாட்கள் முழுதும்
காகித கப்பலென,
உருவங் கொண்டாலென்ன...?
புத்தகக் கேள்வி தொலைந்து
மழை வேள்வி என்னுள் நிகழ்ந்தது...
புத்தகம் கொண்ட தாட்கள் முழுதும்
காகித கப்பலென,
உருவங் கொண்டாலென்ன...?
புத்தகக் கேள்வி தொலைந்து
மழை வேள்வி என்னுள் நிகழ்ந்தது...
என் நேரம்
பெருங்காற்று ஒன்று வீசியும் தொலைத்தது
காற்றுடன் பயணித்த மழைத்துளி ஒன்று
என் கன்னத்து மேட்டில் முட்டி உடைந்தது
பெருங்காற்று ஒன்று வீசியும் தொலைத்தது
காற்றுடன் பயணித்த மழைத்துளி ஒன்று
என் கன்னத்து மேட்டில் முட்டி உடைந்தது
மழைநீரின் சதியோ, மழைக்காற்றின் சதியோ
காற்றுடன் சேர்ந்த சாரல் தெறித்தது என் மீது...
என் உடல் கொண்ட உணர்வைச் சொல்ல என்னிடம் சொற்கள் தான் ஏது...??
காற்றுடன் சேர்ந்த சாரல் தெறித்தது என் மீது...
என் உடல் கொண்ட உணர்வைச் சொல்ல என்னிடம் சொற்கள் தான் ஏது...??
தேக மயிர்கள் மலர்களென பூத்தன..
உதடுகளோ மழைப்பாடல் வரிகளாய் தேடித்திரிந்தன...
உதடுகளோ மழைப்பாடல் வரிகளாய் தேடித்திரிந்தன...
மழை வரும் நேரமெல்லாம்
மறவாமல் வந்து போகும்
முதல் காதல் ஞாபகங்கள் என்னை மேய்ந்தன...
நான் பனித்தேகமாய் பிறக்கவில்லை தான்
ஒருத்தியை நினைந்து
"மழையிலும் வெயிலிலும் உருகிடாத
பனிச்சிலை நீயடி" என கிறுக்கியதை மறக்கவும் இல்லை தான்..
"மழையிலும் வெயிலிலும் உருகிடாத
பனிச்சிலை நீயடி" என கிறுக்கியதை மறக்கவும் இல்லை தான்..
சிறு பொத்தல் போட்டாலும் வெடித்துப்போகும் பலூனென நான்...
என்னை துளைக்கும் ஊசியென ஒரு துளி மழை...
கட்டுப்பாட்டுக் காற்று அடைத்தும் பயனில்லை...
மழைக்குள் கரங்கள் நீண்டன என்னை மீறி
கால்கள் நகர்ந்தன தயக்கங்கள் தாண்டி
கால்கள் நகர்ந்தன தயக்கங்கள் தாண்டி
என் வலப்பாதம் மட்டும் மழை தரிசனம் காண....
திடீரென தடுத்து நிறுத்தி ...
என்னையொரு புகைப்படம் எடுத்துக்கொண்டது மின்னலொளி....
திடீரென தடுத்து நிறுத்தி ...
என்னையொரு புகைப்படம் எடுத்துக்கொண்டது மின்னலொளி....
என் மழை நேர நடவடிக்கைகளின் ஆதாரமாக
என் அம்மாவிற்கு அனுப்படுமோ இப்புகைப்படம்....????
மழையின் இரைச்சல் இசையில்
ஒரு மின்னணு ஒலி ஒளி... அய்யோ!!!
அம்மாவின் அழைப்பு என் கைப்பேசியில்..
அட. ! வான்வெளி இத்துணை வேக ஊடகமா..??
ஆதாரமென எடுத்த படம்
என் அம்மாவைச் சேர்ந்திருக்குமா..?
சந்தேகத்துடன்
மின்னணு ஒலி ஒளியில் அம்மாவின் அழைப்பு...
சிறிது பேசிவிட்டு வருகிறேன்...
----மழை எனும் நான்(கவிதைச் சிறுகதை)
No comments:
Post a Comment